சேலம், நவ.22: தி காவிரி பொறியியல் கல்லூரியும், ஐஎஸ்டிஇ கூட்டமைப்பும் சேர்ந்து, காவிரி கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம், கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு தேசிய பயிற்சியாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினரை, கல்லூரிகளின் டீன் ஓபுளி பொன்னாடை அணிவித்தும், கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராமநாதன் நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தனர். பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார். இயந்திரவியல் துறை தலைவர் பெஞ்சமின் லாசரஸ் வாழ்த்துரை வழங்கினார். பொறியியல் கல்லூரி முதல்வரும் ஐ.எஸ்.டி.ஐ கூட்டமைப்பின் தலைவருமான துரைசாமி தலைமையுரை வழங்கினார்.