தம்மம்பட்டி அருகே உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

தம்மம்பட்டி, நவ.22: தம்மம்பட்டி அருகே தெருக்கூத்து நாடகத்தை தடுக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து, உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில், சுமார் 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். செந்தாரப்பட்டி பகுதியில் கடந்த 40 வருடங்களாக நடந்து வந்த அண்ணமார் பொன்னர்-சங்கர் தெருக்கூத்து நாடகத்தை இந்த வருடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தெருக்கூத்து நாடகத்தை நடத்த விடாமல் அரசு அதிகாரிகள் தடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அரசு அதிகாரிகளை கண்டித்து வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலை 20க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகளும், ஊர் பொதுமக்களும் சேர்ந்து புறக்கணிப்பதாக செந்தாரப்பட்டியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: