அரசு போக்குவரத்து கழகத்தில் 29 உயர் அதிகாரிகள் இடமாற்றம்

சேலம், நவ.22:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 29 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு தலைமை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம் புதுக்கோட்டை மண்டலத்தில் முதன்மை துணை மேலாளராக பணியாற்றிய ஆறுமுகம், சேலம் மண்டல பொது மேலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கோட்ட துணை மேலாளராக பணியாற்றிய குமார், கோவை கோட்ட (தொழில்நுட்பம்) முதன்மை துணை மேலாளராகவும், சேலம் கோட்ட துணை மேலாளராக பணியாற்றிய லட்சுமண், சேலம் கோட்ட (தொழில்நுட்பம்) முதன்மை துணை மேலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சேலம் கோட்ட துணை மேலாளராக பணியாற்றிய ஜீவானந்தம், சேலம் கோட்ட தர்மபுரி மண்டலம் முதன்மை துணை மேலாளராகவும், விழுப்புரம் கோட்ட துணை மேலாளராக பணியாற்றிய சுவர்ணலதா, சேலம் கோட்ட (மனிதவள மேம்பாட்டு) முதன்மை துணை மேலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: