மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

சேலம், நவ.22: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணியிடங்களுக்கு நாளை மற்றும் 24ம் தேதிகளில் எழுத்துத்தேர்வு நடக்கிறது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை மற்றும் 24ம் தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நாளை (23ம் தேதி) காலை10 மணி முதல்1மணி வரை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி மற்றும் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிஆகிய தேர்வு மையங்களில் நடக்கிறது. இதர கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு 24ம் தேதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஸ்ரீகணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது.  தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் நுழைவுச்சீட்ைட www.slmdrb.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்,  மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: