போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, நவ.22: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி பகுதியை சேர்ந்த பழனிமுத்து மகள் ரஞ்சிதா (19). இவர் துறையூர் அருகே தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் மகன் விஷ்ணு (22). இவர் ராசிபுரத்தில் தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து, இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது.  ரஞ்சிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி விஷ்ணு, ரஞ்சிதா வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் உள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.  இதுகுறித்து எஸ்ஐ முருகேசன் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: