×

விவேகானந்தா மருத்துவமனைக்கு தமிழக அரசு விருது வழங்கல்

திருச்செங்கோடு,  நவ.22: முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய   திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு மருத்துவமனைக்கு, தமிழக அரசு விருது  வழங்கி கௌரவித்துள்ளது. திருச்செங்கோடு  அருகேயுள்ள எளையாம்பாளையத்தில், விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை 300 படுக்கை வசதிகளுடன், கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த  மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1,125 மருத்துவமனைகளில் இந்த  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல்வரின் விரிவான  காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, சென்னையில் நடந்த விழாவில், திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு  மருத்துவமனைக்கு, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை மக்கள் நல்லாழ்வுத்துறை  அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதனை, விவேகானந்தா மருத்துவமனையின்  இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், விவேகானந்தா  கல்லூரிகளின்  துணை தலைவர் டாக்டர் கிருபாநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு  விவேகானந்தா கல்லூரிகளின் தலைவர் கருணாநிதி, நிர்வாக இயக்குனர் கிருஷ்ண  வேணி கருணாநிதி, அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாகிகள், மருத்துவமனை  டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Vivekananda Hospital ,
× RELATED விவேகானந்தா மருத்துவமனை வளாகத்தில்...