பள்ளிபாளையம், நவ.22: வெப்படையில், நூற்பு ஆலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பாரதி நூற்பு ஆலையில், பெண் தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. கிராமப்புற மகளிர் அமைப்பும், குமாரபாளையம் ஜேகேகே பல் மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்திய, இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் கார்த்திகா, கிருபா ஆகியோர் பங்கேற்று பெண் தொழிலாளர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கனர். இதில் 130 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.