×

தொழிலாளர்களுக்கு கூலி வழங்காமல் அலைக்கழிப்பு தனியார் பள்ளி மீது போலீசில் புகார்

சூளகிரி, நவ.22: சூளகிரி கட்டிட பணிக்கான கூலியை வழங்காமல் அலைகழித்து வரும் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூளகிரி அருகே புக்கசாகரம் கிராமத்தில், தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், கடந்த 2012ம் ஆண்டு கட்டிட பணி நடைபெற்றது. இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை கூலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து போஸ்டர் அச்சடித்து, பள்ளி சுவற்றில் ஒட்டியுள்ளனர். இதனை பள்ளி நிர்வாகம் கிழித்தெறிந்துள்ளது. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான சிவா என்பவர், பேரிகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார். அதில், கட்டிட பணிக்கான கூலி வழங்காமல் அலைக்கழித்து வரும் பள்ளி நிர்வாகம் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு