×

பேரிகை கூட்டுறவு சங்க செயலாளர் திடீர் மரணம்

சூளகிரி, நவ.22: சூளகிரி தாலுகா பேரிகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் செயலாளராக பணியாற்றியவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பொறுப்பு செயலாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரி பீமாண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர்(40) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை அவர் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். மதியம் 1 மணியளவில் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே, சக ஊழியர்களை அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ஜெயசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு