×

மத்தூர் அருகே மணல் கடத்திய 2 லாரி பறிமுதல் 2 பேருக்கு வலை

போச்சம்பள்ளி, நவ.22:  மத்தூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். மத்தூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார், கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, நடுப்பட்டி ஆற்றுப்பகுதியில் 2 பேர் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, 8 யூனிட் மணலுடன் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கருங்கல் நகரைச் சேர்ந்த பிரபாகரன்(30), ரமேஷ்(36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : persons ,Mathur ,
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது