×

நீர்நிலைகளில் பனைவிதைகள் நட்ட மாணவர்கள்

சாயல்குடி, நவ.22: இளஞ்செம்பூர் அரசு பள்ளி மாணவர்கள் நீர்நிலைகளில் பனைவிதைகள் நட்டனர்.
கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளில் மண் அரிமானம் தடுப்பதற்கு பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி தேசிய பசுமைபடை மாணவர்கள் சார்பில் இளஞ்செம்பூர், பூக்குளம், காலனி பகுதியிலுள்ள கண்மாய், ஊரணி கரைகளில் பனைவிதைகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ரெனிஜா தலைமை வகித்தார். தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடப்பட்டது.
மேலும் பள்ளி வளாகம், கோயில் வளாகம், சாலையோரங்களில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பிறகு பள்ளியில் நடந்த மரம் நடுதல் விழிப்புணர்வு கருத்தரங்களின் பனைமரம் மற்றும் இதர மரங்கள் நடுதலின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

Tags : water bodies ,
× RELATED நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு...