×

மனைவி புகாரால் கணவன் மீது வழக்கு

திருவாடானை, நவ.22:  திருவாடானை அருகே பத்திரன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி ராணி(36). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இளங்கோ வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில், மூன்று குழந்தைகளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது எனவும் சமரசம் பேசியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் எதுவும் கொடுக்காததால், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இளங்கோவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை