மதுரை, நவ. 22: மதுரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் 90 பேர் பங்கேற்றனர்.
மதுரையில் நேற்று தொடக்க கல்வியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடந்தது.