பள்ளிக் கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 90 பேர் பங்கேற்பு

மதுரை, நவ. 22: மதுரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் 90 பேர் பங்கேற்றனர்.

மதுரையில் நேற்று தொடக்க கல்வியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடந்தது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

இந்த கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் 60 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 30 பேரும் கலந்து கொண்டனர். ஆன்லைனில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மாறுதல் கலந்தாய்வுக்கான இடத்தை தேர்வு செய்வது இரவு வரை நீடித்தது.

Related Stories: