வைகை வெள்ளத்தில் சிக்கியவர் மாயம்

மதுரை, நவ. 22: மதுரை விளாங்குடி தென்றல் நகரை சேர்ந்தவர் ராஜா மகன் செவின் (22). கல்லூரி மாணவர். இவர் அப்பகுதியில் வைகை ஆற்றுக்கு நேற்று மதியம் 1.30 மணியளவில் குளிக்க சென்றார். அப்போது அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அருகில் நின்றவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு படையினர், நிலைய அலுவலர் (பொ) சிவக்குமார் தலைமையில் சென்று தேடினர். மாலை வரை பல மணி நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Related Stories: