கொடைக்கானலில் இன்று மின்தடை

கொடைக்கானல், நவ. 22: கொடைக்கானலில் இன்று வெள்ளிக் கிழமை 21.11.19 காலை 9 மணி முதல் மாலை 5 மணி மணி வரை மின் தடை உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கொடைக்கானல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான கொடைக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் மேத்யூ தெரிவித்தார்.

Related Stories: