திண்டுக்கல், நவ. 22: திண்டுக்கல்லில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியானதே தவிர இன்னும் சுகாதாரம் இல்லாமலே உள்ளது. வெளியூர் நபர்கள், வியாபாரிகள், ரயில், பஸ் பயணிகள் சிறுநீர் கழிக்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் திறந்த வெளி சிறுநீர் கழிக்கும் இடத்தை சுத்தம் செய்ய மிகவும் சிரமபடுகின்றனர்.