திண்டுக்கல், நவ. 22: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் தொப்பம்பட்டி ஆகிய வட்டார அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் தொப்பம்பட்டி வட்டாரத்தில் உள்ள படித்த ஆண், பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் பழநி வட்டம் சிவகிரிப்பட்டியிலுள்ள எஸ்.கே.எம். கல்யாண மாஹலில் நடைபெறுகிறது.