திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல், நவ. 22: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் தொப்பம்பட்டி ஆகிய வட்டார அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் தொப்பம்பட்டி வட்டாரத்தில் உள்ள படித்த ஆண், பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் பழநி வட்டம் சிவகிரிப்பட்டியிலுள்ள எஸ்.கே.எம். கல்யாண மாஹலில் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் 18 வயது நிறைவு பெற்ற ஜந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை.யைச் சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயவிபரக் குறிப்பு, புகைப்படம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: