மாவட்டத்தில் சர்க்கரை அட்டை தாரர்கள் அரிசி அட்டைகளாக மாற்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், நவ. 22: மாவட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையிலிருந்து அரிசி அட்டைகளாக மாற்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் 19.11.2019 அன்று சர்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திடும்படி உத்திரவிடப்பட்டுள்ளார்.

அதன்படி, சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை 26.11.2019க்குள் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள 6,30,981 மின்னணு அட்டைகளில், 19,861 அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் 26.11.2019க்குள் சர்க்கரை பெறும் குடும்ப அட்டையிலிருந்து அரிசி பெறும் குடும்ப அட்டையாக மாற்றம் செய்யக் கோரி இணையதளம் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: