×

கஞ்சா விற்ற 8 பேர் கைது

திருப்பூர்,நவ.22: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை கிராம நிர்வாக அலுவலகம், கே.செட்டிபாளையம், புதுப்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் ரூரல் மற்றும் வடக்கு ஆகிய பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற பாபு(23), மூனேஷ்வரன்(19), கொடியரசன்(26), சந்திரசேகர்(32), லீவன்(20), முருகன்(23) ஆகியோரை கைது செய்து 3 கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மத்திய போலீசார் ஜீவா நகர் ஓடக்கரை, மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் கையில் மஞ்சள் நிற பைகளோடு இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த விமல்  (23), தமிழரசன் (21) என்பதும் இவர்கள் அந்த பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ