×

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

குன்னூர், நவ.22:குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் உள்ள தனியார்  விவசாய நில கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்  கிடப்பதாக  அப்பகுதி மக்கள்  கேத்தி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் கேத்தி   தீயணைப்பு  துறையினர்  விவசாய கிணற்றில் இருந்து ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர்  வைத்திருந்த செல்போன் கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் பிரகாசபுரம் பகுதியை  சேர்ந்த வடிவேல்(32) (சுமை தூக்கும்  தொழிலாளி) என்பது தெரியவந்தது. இவர் திருமணம் ஆகாதவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மனவருத்தம்  காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...