பந்தலூர், நவ.22: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த திலகவள்ளி என்பவர் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை நேற்று ஊட்டியில் தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கிடம் அளித்தார். அருகில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா மற்றும் பந்தலூர் ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.