×

பஸ் மோதி பெண் பலி

கோவை, நவ.22:கோவை சோமையனூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி உஷா(54), தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இடையர்பாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே உஷா உயிரிழந்தார். ஜெயக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு