×

விசைத்தறி தொழிலாளி நீரில் மூழ்கி பலி

சோமனூர், நவ. 22: சோமனூர் அடுத்த கே.ராயர்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன்(38), விசைத்தறி தொழிலாளி விக்னேஸ்வரன்(22), உள்ளிட்ட 4 பேர்  வடுகபாளையத்தில் உள்ள நீர் தேக்க குட்டையில் நேற்று காலை நீச்சல் பழக சென்றுள்ளனர்.   இந்நிலையில், விக்னேஸ்வரன் ஆழமான பகுதியில் இறங்கியதால் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த சக நண்பர்கள் காப்பாற்ற முடியாமல் கரையின் மேல் வந்து அருகில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய விக்னேஸ்வரனை தேடினர். இரண்டு மணி நேரம் போராடி மதியம்  இரண்டு மணிக்கு விக்னேஸ்வரனின் உடலை மீட்டனர். கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Power worker ,
× RELATED சென்னை பல்லாவரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு