பண்ணை குட்டைகள் அமைக்க 100 % மானியம்

ஈரோடு, நவ.22: ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பொறியியல் துறை மூலம் அனைத்து ஒன்றியங்களிலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பயன்படும் பண்ணைக்குட்டையை இலவசமாக அமைக்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பண்ணை குட்டையானது பட்டா இடத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் வரைபடத்தை இணைத்து வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories: