சத்தியமங்கலம், நவ.22: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தாளவாடி அருகே குன்னண்புரம் கிராமத்தில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த விளையாட்டு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கு 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.