×

தாளவாடியில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

சத்தியமங்கலம், நவ.22: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தாளவாடி அருகே குன்னண்புரம் கிராமத்தில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த விளையாட்டு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கு 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இரவு நேரத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எஸ்பி பொதுமக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந் நிகழ்ச்சியில், தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு, ஈரோடு மாவட்ட நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார்  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சென்ற எஸ்பி சக்தி கணேசன், கோயில் வளாகத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Public Relations Game Competition ,
× RELATED காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி