×

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்று வீசியதால் பேனர் பறந்து மின்கம்பியில் சிக்கியது

சத்தியமங்கலம், நவ.22: சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே பலத்த காற்று வீசியதால் பேனர் பறந்து மின்கம்பியில் சிக்கியது. இதனால், 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
சத்தியமங்கலம் பஸ் நிலைய வளாகம் மற்றும் கோபி சாலையில் உள்ள வணிக வளாக கடைகளில் தங்களது கடை பெயர் குறித்த விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் இப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், ஒரு கடையில் இருந்த விளம்ப போர்டு பறந்து சென்று மின்கம்பியின் மீது விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியில் சிக்கிய பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மாலை 7 மணி வரை மின்தடை ஏற்பட்டது. கடைக்காரர்கள் தங்களது கடை பெயர் அடங்கிய விளம்பர போர்டுகளை காற்றில் பறக்காத வகையில் பாதுகாப்பாக வைக்குமாறு சத்தியமங்கலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Sathyamangalam ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...