ஈரோடு, நவ.22: ஈரோடு பிரப் சாலையை மீனாட்சி சுந்தரனார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த சாலையின் பெயர் பலகை திறக்கப்பட்டது.
ஈரோட்டில் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் வரை உள்ள பகுதி பிரப் ரோடு என அழைக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் புதிய மேம்பால திறப்பு விழாவின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, கடந்த பிப்.27ம் தேதி பிரப் சாலையின் பெயரை மீனாட்சி சுந்தரனார் சாலை என்றும், ஈஸ்வரன் கோயில் பின்புறம் உள்ள தெப்பக்குளம் வீதியை கணிதமேதை ராமானுஜம் வீதி என்றும் மாற்றி அறிவித்தார்.