×

பணம் திருடிய பெண் கைது

ஈரோடு, நவ.22: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ்.குமரப்பன் நகரை சேர்ந்தவர் லட்சுமி (54). இவர், பள்ளிபாளையம் செல்வதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம் மதியம் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அருகில் நின்றிருந்த ஒரு பெண், லட்சுமியின் கைப்பையில் இருந்த ரூ.500ஐ திருடிவிட்டு அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றார். சுதாரித்து கொண்ட லட்சுமி, அந்த பெண்ணை பிடித்து கருங்கல்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த செல்வி (50) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்வியை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு