ஈரோடு, நவ.22: மரவள்ளி கிழங்கு கடந்த 25 நாட்களில் ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, பெருந்துறை, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்கு சேலம் ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஜவ்வரிசி விலை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ) ரூ.5,350க்கு விற்ற நிலையில் 15 நாட்களில் திடீரென்று விலை சரிந்து கடந்த 14ம் தேதி ரூ.4,725 விற்றது. பின்னர், படிப்படியாக உயர்ந்த ஜவ்வரிசி விலை, தற்போது ரூ.5100க்கு விற்பனையாகிறது.