பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

ஈரோடு, நவ.22:  ஈரோடு சம்பத் நகரில் கலெக்டர், எஸ்பி முகாம் அலுவலகம் எஸ்பி முகாம் அலுவலகம் உள்ளது. அந்த வழியாக நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்மநபர், அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதைப்பார்த்து அப்பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு, அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் அந்த நபரை விரட்டி சென்று, பெரியவலசு பகுதியில் மடக்கி பிடித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஈரோடு பெரியவலசை சேர்ந்த வீரமணி (21) என்பதும், இஸ்திரி போடும் தொழிலாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து வீரமணியை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: