விக்கிரவாண்டி, நவ. 22: வானூர் அருகே ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (60). இவர் தனது ஆடு, மாடுகளை விற்பனை செய்ய திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் சந்தைக்கு செல்வதற்காக மினி வேனில் ஏற்றி சென்றார். இவருடன் அதே ஊரை சேர்ந்த காளிதாஸ் (26) இருந்தார். மினி வேனை அதே ஊரை சேர்ந்த எழில்ராஜ் (32) ஓட்டினார். இந்நிலையில் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையை மினி வேன் கடந்தபோது கொச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் மோதியது. இதில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த சின்னராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு ஆடுகள், ஒரு மாடு ஆகியவை சம்பவ இடத்திலேயே இறந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.