×

மாநில திருக்குறள் ஒப்புதல் போட்டி: 2 மாணவிகள் தகுதி

காலாப்பட்டு, நவ. 22:  புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை  திறன் வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. திருச்செங்கோடு பசுமை நண்பர்கள் குழு  சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற  மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாச்சலம் பரிசுகளை வழங்கி  பாராட்டி பேசினார். இதற்கான  ஏற்பாடுகளை ஆசிரியர் அருள் செய்திருந்தார். மேலும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்த 7ம் வகுப்பு மாணவி சினேகா, 2ம் இடம் பிடித்த மாணவி ஜெனிபர் அமலி ஆகியோர் கோயம்புத்தூரில்  நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...