ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

காலாப்பட்டு, நவ. 22: காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஆசிட் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று காலை பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்ப சென்றது. பெட்ரோல் பங்க்குக்கு செல்ல லாரியை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு டைல்ஸ் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி திடீரென டேங்கர் லாரி மீது மோதியது. மேலும், டேங்கர் லாரி மீது மோதிய வேகத்தில் கன்டெய்னர் லாரி சாலை தடுப்புக்கட்டையில் மோதி நின்றது.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் விபத்தில் காயமடைந்த கன்டெய்னர் லாரி டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த அய்யனார் (26) என்பவரை மீட்டு கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். லாரி சாலையில் கவிழ்ந்திருந்தால் பேராபத்து  ஏற்பட்டிருக்கும். பக்கத்தில் 2 பெட்ரோல் பங்க்குகள் இருப்பதால் உயிர்சேதமும்  ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: