வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கியவர் சிறையில் அடைப்பு

காலாப்பட்டு, நவ. 22:   மரக்காணம் அருகே உள்ள கழிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (22). இவர் புதுவைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டர் சைக்கிளில் இசிஆர் சாலை வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கோட்டக்குப்பம் அருகே வந்தபோது, வண்டியை நிறுத்திவிட்டு பிரியாணி சாப்பிட கடைக்கு சென்றார். அங்கு கடைக்காரரிடம் நாவற்குளத்தை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார். கடைக்கு சென்ற மணிமாறன், ரமேஷிடம் எதுக்கு பிரச்னை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரமேஷ் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து மணிமாறனின் கழுத்தில் தாக்கினார். இதில் காயமடைந்த மணிமாறனை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து திரும்பி மணிமாறன் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: