சாலையோர மின்கம்பத்தில் பைக் மோதி பெயிண்டர் பலி

புதுச்சேரி, நவ. 22:  மேட்டுப்பாளையத்தில் சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதியதில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.  புதுவை, சண்முகாபுரம், காந்தி வீதியில் வசித்தவர் தசரதகுமரன் (62).  பெயிண்டரான இவருக்கு குமுதவள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.  சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இரவு 8.30 மணியளவில் தனது மோட்டார்  சைக்கிளில் தசரதகுமரன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்  மேட்டுப்பாளையம், சோனியாகாந்தி நகர், கனரக ஊர்தி முனையம் அருகிலுள்ள ஒரு  மதுக்கடை அருகே குடிபோதையில் வேகமாக வந்த அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

 இதில் தூக்கி வீசப்பட்டு  கீழே விழுந்து கிடந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஜிப்மருக்கு  கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே தசரதகுமரன் இறந்து  விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து தசரதகுமரனின் மகன் ஹரிகரன் அளித்த  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வடக்கு டிராபிக் எஸ்ஐ தியாகராஜன்  தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: