புதுச்சேரி, நவ. 22: மேட்டுப்பாளையத்தில் சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதியதில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். புதுவை, சண்முகாபுரம், காந்தி வீதியில் வசித்தவர் தசரதகுமரன் (62). பெயிண்டரான இவருக்கு குமுதவள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இரவு 8.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் தசரதகுமரன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் மேட்டுப்பாளையம், சோனியாகாந்தி நகர், கனரக ஊர்தி முனையம் அருகிலுள்ள ஒரு மதுக்கடை அருகே குடிபோதையில் வேகமாக வந்த அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.