×

விபத்தில் காவலர் படுகாயம்

திருக்கோவிலூர், நவ. 22: திருக்கோவிலூர் அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் சந்திரசேகர் (26). இவர் திருவண்ணாமலை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி ஆற்காட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வீரசோழபுரம் செல்லும் சாலையில் எதிரே வந்த டிராக்டர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சந்திரசேகர் அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Accident guard ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை