×

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருக்கோவிலூர், நவ. 22: திருக்கோவிலூர் அருகே கீழதாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் கிருஷ்ணன் (38), டிரைவர். இவருக்கும், மகாலட்சுமி (32) என்பவருக்கும் கடந்த 9 வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல்ராஜ், விமல்ராஜ் என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு மகாலட்சுமியை தாய் வீட்டுக்கு சென்று நகை மற்றும் பணம் வாங்கி வரச்சொல்லி கிருஷ்ணன், அவரது தந்தை மாயவன், தாய் நவநீதம், சகோதரர் ரமேஷ் ஆகியோர் கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பணம், நகை வாங்கி வரவில்லை எனில் 2வது திருமணம் செய்து கொள்வேன் என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகாலட்சுமி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை