×

இளம்பெண் திடீர் மாயம்

திருக்கோவிலூர்,  நவ. 22: திருக்கோவிலூர் அடுத்த வேடாலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன்  ஆனந்தகுமார்(46), இவர் வீரபாண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பில்  கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமிக்கும், அப்பகுதியில் மற்றொரு நபருக்கும் இடையே கடந்த 18ம் தேதி  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயலட்சுமி செல்போனில் கணவர் ஆனந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது விஜயலட்சுமியை  காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் ஆனந்தகுமார் புகார் அளித்தார். அதன்பேரில்  போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை