×

2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கடலூர், நவ. 22: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படும் தமிழக அரசு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் பொதுமக்களை உடனுக்குடன் சென்றடைந்து, அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரும் அதன் பயன்களை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் வாழும் ஏழை தாய்மார்கள் திருமணமான தங்களின் பெண் பிள்ளைகளை வளைகாப்பு நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமென்ற தாயுள்ளதோடு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சாதி மத பேதமின்றி ஏழை எளிய வீட்டில் திருமணமான பெண் பிள்ளைகளுக்கு வளைகாப்பு நடத்தி தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 2014ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், சந்தனம், சேலை, வளையல், பிளவுஸ் பிட், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் மற்றும் எவர் சில்வர் தட்டு என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மற்றும் ஒன்பதாவது மாத காலத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2019-20ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் கீழ் 14 வட்டாரங்களிலுள்ள 71 தொகுதிகளுக்கு தலா 40 கர்ப்பிணிகள் வீதம் ஆண்டுக்கு 2,840 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் மூலமாக இலவசமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.7,10,000 மதிப்பீட்டில்  தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் தேவையான சீர்வரிசைகள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : women ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது