பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் பழனிக்குமார் (44). மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் மனைவி விமலா மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு முல்லை நகர் பேருந்து பணிமனை அருகே பைக்கில் ரோந்து சென்றபோது, அவ்வழியே வந்த மாநகராட்சி குப்பை லாரி, ஏட்டு பழனிக்குமார் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பழனிக்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.