காரைக்கால், நவ. 20: காரைக்காலில் சாப்பிட பணம் கேட்ட மதுக்கடை காவலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு நாகூர் அடுத்த பனங்குடி, தங்கமங்கலம் காலனியை சேர்ந்த வடிவேல் மகன் விமல்ராஜ் (31) காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இதே கடையில் காரைக்கால் நிரவி கள்ளர் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் மனோஜ் (26) கேஷியராக பணியாற்றினார். கடந்த 16ம் தேதி பணியில் இருந்த விமல்ராஜ் இரவு 11 மணியளவில் கடையை மூடிய பின்னர் கேஷியர் மனோஜிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். கணக்கு முடிக்காததால் பணம் கொடுக்க முடியாது எனக்கூறி அவர் விமல்ராஜை விரட்டியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.