×

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில் ஷேல் காஸ் திட்டத்தை செயல்படுத்த கூடாது

ஜெயங்கொண்டம், நவ. 20:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் செயல்படுத்த இருந்த செயல்கள் திட்டத்தை செயல்படுத்த கூடாது என கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்தனர்.ஜெயங்கொண்டம் பகுதியில் இந்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் தேவா மங்கலம் ,சோழன் குறிச்சி, பிராஞ்சேரி ,புதுக்குடி தெற்கு கரைமேடு, குருவாலப்பர் கோவில் உட்பட ஆறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.கடந்த 2016 ஜனவரி 4ம் தேதி முதல் புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதி மக்கள் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என பலவகைகளில் போராட்டம் நடத்தி வந்தனர் இந்நிலையில்ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ பூங்கோதை தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது பேச்சுவார்த்தையின்போது ஓஎன்ஜிசி பொது மேலாளர் சாய் பிரகாஷ்,தலைமை பொது மேலாளர் ரவிச்சந்திரன், உதவி பொது மேலாளர்கள், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் மாநிலத் தலைவர் ஜான் பீட்டர் உள்ளிட்ட பல அலுவலர்களும் இலையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் , உட்பட புதுக்குடி தெற்கு கரைமேடு வடக்கு கரைமேடு வடக்கு சூரிய மணல், செங்குந்தபுரம் இலையூர் நடுப்பட்டி, கோரியம்பட்டி, செட்டிகுளம் உள்ளிட்ட பல கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் பேச்சுவார்த்தையில் ஓஎன்ஜிசி அலுவலர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சலுகைகளை பற்றி கூறினர்.பொதுமக்கள் ஷேல் கேஸ் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட வாயு எடுக்கும் திட்டம் மூலம் இப்பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கும் அதனால் இத்திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த கூடாது என கூறினர் மீண்டும் இத்திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த முயன்றால் பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் இவ்வாறு பொதுமக்கள் கூறி அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Tags : area ,Pudukkudi South Karamedu ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...