×

திருக்கடையூர் பகுதியில் சம்பா பயிர்களை நாசம் செய்யும் பன்றிகள்

தரங்கம்பாடி, நவ.20: திருக்கடையூர் பகுதியில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களை பன்றிகள் அழித்து நாசம் செய்து வருவதாலும், சுகாதாரக் கேட்டை விளைவிப்பதாலும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர் பகுதியில் சீதசிந்தாமணி, உலகமாதேவி, பிச்சைக்கட்டளை, காலாக்கட்டளை, திருமெய்ஞானம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பன்றிகள் அலைந்து திரிகின்றன. அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை அழித்து நாசமாக்கி வருகிறது. அந்த பன்றிகளை பிடிக்க செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றும், பன்றிகள் பிடிக்கப்படாமல் இருப்பது அப்பகுதியில் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பன்றிகள் கோயில் வாசலிலும் வந்து மேய்வதால் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் முகம் சுழிந்தவாறு செல்கின்றனர். எனவே பன்றிகளை வலைவைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Samba ,
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்