×

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் விண்ணப்பிக்க வேண்டுகோள்

கரூர், நவ. 20: முன்னாள் படைவீரர் நலத்துறை வாயிலாக பல்வேறு கல்வி பயிலும் முன்னாள்படைவீரர் சிறார்களுக்கு, தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது.மத்திய முப்படைவீரர் வாரியத்தில் விண்ணப்பிக்காதவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்வி, தொழிற்கல்வி, பல தொழில்நுட்பக்கல்வி, 1முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் முன்னாள்படைவீரர் சிறார்களின் பெற்றோர்கள், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் மீள சமர்ப்பித்து, கல்வி உதவித்தொகை பெற்று செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது,கலை, அறிவியல் கல்வி ரூ.10 ஆயிரம், தொழிற்கல்வி ரூ.25 ஆயிரம், பல்தொழில்நுட்பக்கல்வி ரூ.20 ஆயிரம், 1முதல் 5ம் வகுப்பு வரை ரூ.500, 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.800, 9 முதல் 10ம் வகுப்பு வரை ரூ.1,000, 11முதல் 12ம் வகுப்பு வரை ரூ.1,500, தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...