×

பூங்கா நகர் பகுதியில் மோசமான நிலையில் சின்டெக்ஸ் தொட்டி

கரூர், நவ. 20: கரூர் பூங்கா நகர் பகுதியில் அழுக்கடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் தாந்தோணிமலை பூங்கா நகர் பகுதியில் இந்த பகுதி மக்கள் உபரி தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த டேங்க் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிறது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தொட்டியை தாங்கி நிற்கும் சிமெண்ட் தளத்தை சுற்றிலும் அழுக்கடைந்த நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் உருவாகும் கிருமிகள் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே இதனை சுத்தம் செய்து தர வேண்டும் எனவும் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசமான நிலையில் உள்ள இந்த சின்டெக்ஸ் டேங்கினை சுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : park city ,
× RELATED பூங்கா நகரம் பர்ஸ்ட் லுக் வெளியீடு