×

ஏமூர், முத்துலாடம்பட்டிக்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், நவ. 20: கரூர் திண்டுக்கல் சாலையில் இருந்து ஏமூர், முத்துலாடம்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை பகுதியை அடுத்து இடதுபுறம் ஏமூர், காந்திகிராமம், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை பிரிகிறது. இந்த சாலையோரம் அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. அதிகளவு குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.

ஆனால் சாலையின் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பிட்ட தூரம் குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ள இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பகுதியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முத்துலாடம்பட்டி வழியாக செல்லும் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Motorists ,ditch road ,Muthuladampatti ,Emur ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...