ஒரத்தநாடு, நவ. 20: ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி பகுதியில் இதுவரை போதிய அடிப்படை வசதிகள் செய்யவில்லை. இந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தமிழக அரசால் 2018 -2019ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முள்ளுக்குடிகொல்லை பகுதியில் குடிநீருக்காக ரூ.6 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து ரூ.10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி கட்டி இன்று வரை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த கிராமத்துக்காக மயான கொட்டகை இல்லை. பழங்கால வழக்கப்படி ஒரு தகர கொட்டகையில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளை மக்கள் செய்து வருகின்றனர்.