பாபநாசம், நவ. 20: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்க்கரை நோய் ஒழிப்பு தினவிழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். முதுநிலை தாவரவியல் ஆசிரியர் லோகநாதன் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.