×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு

திருச்சுழி, நவ. 20: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை டிச. 13ம் தேதிக்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நரிக்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இசலியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரமேஷ், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசுவிடம் 6வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினராக போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார்.

இதில் நரிக்குடி தெற்கு, வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர்கள் போஸ், கண்ணன், அவைத்தலைவர் தியாகராஜன், ஊராட்சி செயலாளர் சக்திவேல், தெய்வேந்திரன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் பொன்னு செல்வம் மற்றும் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோன்று பலரும் விருப்ப மனு அளித்தனர்.

Tags : DMK ,government ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...